கடலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டம்
- 2 பேர் திடீரென்று சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- ஒரு சிலர் எங்கள் நிலத்தை ஆக்கிரமித்து உள்ளதை மீட்டு தர கோரியும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளோம்.
கடலூர்:
கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று காலை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் 2 பேர் கடலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு வந்தனர். பின்னர் தங்கள் கோரிக்கைகள் அடங்கிய அட்டையை கையில் வைத்துக் கொண்டு திடீரென்று சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். இதில் பண்ருட்டி ஆண்டிக்குப்பம் சேர்ந்தவர்கள் முருகேசன், பழனி ஆகியோர் தனது நிலத்தில் கூட்டு பட்டா நீக்க கோரியும், ஒரு சிலர் எங்கள் நிலத்தை ஆக்கிரமித்து உள்ளதை மீட்டு தர கோரியும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளோம்.மேலும் இத்தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து அங்கிருந்த போலீசார் உங்கள் கோரிக்கைகள் தொடர்பாக அதிகாரியிடம் மனு அளித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இது போன்ற நடவடிக்கையில் யாரும் ஈடுபடக்கூடாது என தெரிவித்தனர்.