உள்ளூர் செய்திகள்

தீயில் எரிந்து சேதமான காரை படத்தில் காணலாம்.

திண்டிவனத்தில் மர்மமான முறையில் வக்கீல் கார் எரிந்து நாசம்

Published On 2022-07-06 09:26 GMT   |   Update On 2022-07-07 10:26 GMT
  • திண்டிவனத்தில் மர்மமான முறையில் வக்கீல் கார் எரிந்து நாசமானது.
  • மர்ம நபர்கள் யாரேனும் எரித்தார்களா? அல்லது மின் கசிவு காரணமாக ஏற்பட்டதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

விழுப்புரம்:

திண்டிவனம் செஞ்சி ரோடு பகுதியை சேர்ந்தவர் நல்லிக்கோண்டான் திமுக பிரமுகர். ஒலக்கூர் வழக்கறிஞர் அணி நிர்வாகியாகவும் உள்ளார். நேற்று இரவு ஊரல் கிராமத்தில் உள்ள தனது வயல்வெளியில் 4 சக்கரவாகனத்தை நிறுத்துவது வழக்கம். அதேபோல தனது மகேந்திரா பொலிரோ காரை நிறுத்திவிட்டு திண்டிவனத்துக்கு சென்று விட்டார். அங்கு திடீரென அந்த காரானது தீ பற்றி எரிந்தது இதை அக்கம் பக்கத்தினர் பார்த்து அவரிடம் தகவல் தெரிவித்தனர். உடனடியாக திண்டிவனம் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரி விக்கப்பட்டு தீயணைப்பு துறையினர் காரில் பரவியை தீயை அணைத்தனர். அதற்கு முன்பாக கார் முழுவதும் தீயில் கருகியது. இது குறித்து ரோசனை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கருணாகரன் விசாரணை நடத்தி வருகிறார். மேலும் இதன் மதிப்பு ரூ. 10 லட்சம் ஆகும். வழக்கறிஞரின் கார் மர்மமான முறையில் எரிந்து நாசமானது பரபரப்பு ஏற்பட்டது.தீயை மர்ம நபர்கள் யாரேனும் எரித்தார்களா? அல்லது மின் கசிவு காரணமாக ஏற்பட்டதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags:    

Similar News