உள்ளூர் செய்திகள்

வெவ்வேறு சம்பவங்களில் 2 கல்லூரி மாணவிகள் மாயம்

Published On 2022-08-09 10:20 GMT   |   Update On 2022-08-09 10:20 GMT
  • கடந்த 7-ந்தேதி ஊருக்கு வந்த தன்யஸ்ரீ திடீரென மாயமாகிவிட்டார்.
  • இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து தேடி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் மாகரெத்தினப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணப்பா .இவரது மகள் இந்துமதி (வயது 21).தனியார் கல்லூரி ஒன்றில் எம்.ஏ. படித்து வருகிறார். இவர் நேற்று வீட்டைவிட்டு சென்றவர் அதன் பிறகு வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் அவர் குறித்து எவ்வித தகவலும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் கிரிஷ்ணகிரி போலிஸில் இந்துமதியின் தந்தை கிருஷ்ணப்பா தந்துள்ள புகாரில் திம்மராஜ் என்ற தனியார் நிறுவன ஊழியர் தனது மகள் இந்துமதி கடத்தியிருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

இதேபோல ராயக்கோட்டை அருகே யுள்ள ரஹமத் காலனி பகுதியை சேர்ந்த ஆனந்தன் என்பவரது மகள் தன்யஸ்ரீ (வயது 20). இவர் நாமக்கல்லில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வந்தார்.

கடந்த 7-ந்தேதி ஊருக்கு வந்த தன்யஸ்ரீ திடீரென மாயமாகிவிட்டார். இது குறித்து ராயக்கோட்டை போலீசில் ஆனந்தன் தந்த புகாரில் ராயக்கோட்டை கீழத்தெருவை சேர்ந்த விவேக் என்ற வாலிபர் தனது மகளை கடத்தியிருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News