உள்ளூர் செய்திகள்

கடலூர் மாவட்டத்தில் நெல் அறுவடை எந்திரங்களுக்கு விவசாயிகளிடமிருந்து கூடுதல் வாடகை பெற்றால் கடும் நடவடிக்கை

Published On 2023-01-26 07:12 GMT   |   Update On 2023-01-26 07:12 GMT
  • விவசா யிகளின் கோரிக்கையினை ஏற்று கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முத்தரப்புக் கூட்டம் நடை பெற்றது.
  • விவசாயிகளின் அறுவடை பணிகளுக்கு ஒத்துழைப்புவழங்கிட வேண்டும்.

கடலூர்:

கடலூர் மாவட்டத்தில் 2023ஆண்டுக்கு தனியார் நெல்அறுவடை எந்திரங்களுக்கான வாடகையினை நிர்ணயம் செய்து செயல்படுத்த வேண்டுமென்ற விவசா யிகளின் கோரிக்கையினை ஏற்று கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முத்தரப்புக் கூட்டம் நடை பெற்றது. கூட்டத்தில் விவசா யிகள் மற்றும் தனியார் நெல் அறுவடை எந்திரங்கள் உரிமையாளர்களின் கருத்துக்களை கேட்டறி ந்ததன் அடிப்படையில் தனியார் நெல் அறுவடை எந்திரங்களுக்கான வாடகை நிர்ணயம் செய்துகடலூர், மாவட்டக லெக்டர் பாலசுப்ரமணியம் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி 2023 ஆண்டுக்கு சம்பா நெற்பயிர்களை அறுவடை செய்ய , பெல்ட் டைப் தனியார் நெல் அறுவடை இயந்திரங்களுக்கு மணி ஒன்றுக்கு வாடகையாக ரூ.2,400 , டயர் டைப் தனியார் நெல் அறுவடை இயந்திரங்களுக்கு மணி ஒன்றுக்கு வாடகையாக ரூ.1,750 வாடகை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. எனவே நெல் அறுவடை எந்திர உரிமையாளர்கள் நிர்ணயம் செய்யப்பட்ட வாடகைத் தொகைக்கு மிகாமல் விவசாயிகளின் அறுவடை பணிகளுக்கு ஒத்துழைப்புவழங்கிட வேண்டும். 

தவறும் பட்சத்தில் கூடுதல் வாடகை கோரும் எந்திர உரிமையாளர்கள் மீதுசம்மந்தப்பட்ட பகுதி வட்டாட்சியர்கள், வேளாண்மைப் பொறி யியல் துறை மற்றும் வேளாண்மைத் துறை அலுவலர்களிடம் புகார் அளிக்கலாம் என கலெக்டர் பாலசு ப்ரமணியம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்ப ட்டுள்ளது.

Tags:    

Similar News