உள்ளூர் செய்திகள்

கோவையில் கணவர், மகளை தவிக்க விட்டு இளம்பெண் ஓட்டம்

Published On 2022-06-15 09:22 GMT   |   Update On 2022-06-15 09:22 GMT
  • இளம்பெண் கடந்த 6 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
  • இளம்பெண்ணின் செல்போனுக்கு தொடர்பு கொண்ட போது அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

கோவை:

கோவை சரவணம்பட்டி அருகே விநாயகாபுரத்தை சேர்ந்த 24 வயது இளம்பெண். இவர் அந்த பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் வேலை பார்த்து வந்தார்.

இளம்பெண் கடந்த 6 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 3 வயதில் ஒரு மகன் உள்ளார்.

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இளம்பெண்ணுக்கு இன்ஸ்டாகிராம் மூலமாக வாலிபர் ஒருவரின் பழக்கம் கிடைத்தது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. இளம்பெண் கணவர் வேலைக்கு செல்லும் நேரத்தில் வாலிபரை வீட்டுக்கு அழைத்து ஜாலியாக இருந்து வந்தார்.

இந்த கள்ளக்காதல் விவகாரம் இளம்பெண்ணின் கணவருக்கு தெரிய வந்தது. அவர் தனது மனைவியை கண்டித்தார். இதனால் 2 பேருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

சம்பவத்தன்று வழக்கம் போல இளம்பெண் வேலைக்கு புறப்பட்டு சென்றார். மதியம் உணவு சாப்பிடுவதற்காக சென்ற அவர் தனது கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்தார்.

நீண்ட நேரம் ஆகியும் அவர் வேலைக்கு வராததால் மேலாளர் இது குறித்து இளம்பெண்ணின் கணவருக்கு தகவல் தெரிவித்தார். அவர் அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்ட போது அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

இது குறித்து இளம்பெண்ணின் கணவர் வாலிபருடன் ஓட்டம் பிடித்த தனது மனைவியை கண்டு பிடித்து தரும்படி சரவணம்பட்டி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் கணவர் மற்றும் மகளை தவிக்க விட்டு சென்ற இளம்பெண்ணை தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News