உள்ளூர் செய்திகள்

உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

மன்னார்குடியில் உண்ணாவிரத போராட்டம்

Published On 2023-09-07 10:38 GMT   |   Update On 2023-09-07 10:38 GMT
  • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
  • பல வருடங்களாக வழங்காமல் இருக்கும் நிலுவைத் தொகைகளை உடனடியாக வழங்க வேண்டும்.

மன்னார்குடி:

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் கிராம உள்ளாட்சி துறை பணியாளர் சங்கத்தின் சார்பில் மன்னார்குடி ஒன்றியம் கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் பணியாளர்கள் செய்த வேலைக்கு பல மாதங்களாக சம்பளம் வழங்காத தையும் கண்டித்தும், பல வருடங்களாக வழங்காமல் இருக்கும் நிலுவைத் தொகைகளை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்திற்கு ஒன்றிய கவுரவ தலைவர் பெத்தபெருமாள் ஒன்றிய சங்க தலைவர் கருணாநிதி ஆகியோர் தலைமை தாங்கினர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் வீரமணி போராட்டத்தை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் திருவாரூர் மாவட்ட ஏஐடியுசி துணை செயலாளர் காந்தி, சங்க மாவட்ட தலைவர் சாந்தகு மார் உள்ளிட்ட ஏராளமா னோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News