உள்ளூர் செய்திகள்

இந்திராகாந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்திராகாந்தி சிலைக்கு மாலை அணிவிப்பு

Published On 2023-11-20 09:29 GMT   |   Update On 2023-11-20 09:29 GMT
  • நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
  • பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

தரங்கம்பாடி:

மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு மயிலாடுதுறை கொத்ததெரு தரங்கம்பாடி சாலையில் அமைந்துள்ள இந்திரா காந்தியின் திரு உருவ சிலைக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவரும், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினரும்மான ராஜ்குமார் கலந்து கொண்டு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

ரெங்கநாதன் கொடியே ற்றினார்.இதில் காங்கிரஸ் கட்சி மாநில பொதுகுழு உறுப்பினர் கனிவ ண்ணன், நகர தலைவர் ராமானுஜம், துணைத் தலைவர் குருமூர்த்தி, ஒன்றிய கவுன்சிலர் வடவீர பாண்டியன், மகளிர் அனியினர் சுதா உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் மகளீரனினர் திரளாக கலந்துகொண்டு மலர் தூவி பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

Tags:    

Similar News