உள்ளூர் செய்திகள்

ஊட்டியில் தேங்கி கிடக்கும் குப்பை கழிவுகள்

Published On 2023-08-17 09:14 GMT   |   Update On 2023-08-17 09:14 GMT
  • லோயர் பஜார் சாலையில் உள்ள தடுப்பு சுவர் இடித்து சீரமைக்கப்பட்டது.
  • இரட்டை பிள்ளையார் கோவில் தெருவில் அடிக்கடி மழை நீர் கால்வாய் அடைப்பு ஏற்பட்டது.

ஊட்டி,

ஊட்டி 21-வது வார்டுக்கு உட்பட்ட இரட்டை பிள்ளையார் கோவில் தெருவில் அடிக்கடி மழை நீர் கால்வாய் அடைப்பு ஏற்பட்டது.

எனவே லோயர் பஜார் சாலையில் உள்ள தடுப்பு சுவர் இடித்து சீரமைக்கப்பட்டது. ஆனால் அங்கு இடிபாடு பொருட்கள் அகற்றப்படவில்லை.

மேலும் ஒருசிலர் அங்கு குப்பை மூட்டைகளை வீசிவிட்டு செல்கின்றனர். இதனால் அங்கு குப்பை மலை போல தேங்கி கிடக்கிறது.

எனவே லோயர்பஜார் பகுதியில் இடிபாட்டு பொருட்கள் மற்றும் குப்பைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags:    

Similar News