உள்ளூர் செய்திகள்

சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள் விட்டுச் சென்ற மோட்டார் சைக்கிள்களை படத்தில் காணலாம்.

தியாகதுருகம் அருகே சூதாட்ட கும்பல் தப்பி ஓட்டம்

Published On 2022-10-11 07:57 GMT   |   Update On 2022-10-11 07:57 GMT
  • அந்தியூர் வனப் பகுதியில் சிலர் சூதாட்ட த்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
  • 4 மொபட், 3 மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட 7 இரு சக்கர வாகனங்களை கைப்பற்றினர்.

கள்ளக்குறிச்சி:

தியாகதுருகம் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் இளங்கோவன் தலைமை யிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்தியூர் வனப் பகுதியில் சிலர் சூதாட்ட த்தில் ஈடுபட்டது தெரியவந்தது. போலீசாரை கண்ட தும் சூதாட்டத்தில் ஈடுப ட்டவர்கள் அனைவரும் தப்பி ஓடினர். போலீசார் அங்கிருந்த ரூ.1300 பணம் மற்றும் 4 மொபட், 3 மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட 7 இரு சக்கர வாகனங்களை கைப்பற்றினர்.

இதனைத் தொடர்ந்து போலீசார் விசாரணையில் தியாகதுருகம் சந்தை மேட்டு பகுதியை சேர்ந்த சரவணன், நரிக்குறவர் தெருவை சேர்ந்த காமராஜ், கஸ்தூரிபாய் நகர் பகுதியைச் சேர்ந்த கதிர்வேல், சிக்காடு கிராமத்தைச் சார்ந்த ஏழுமலை, பிரதிவிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த விக்னேஷ், அந்தியூர் கிராம த்தைச் சார்ந்த ஆலன் மற்றும் சிலர் தப்பி ஓடியது தெரியவந்தது. இது குறித்து தியாகதுருகம் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News