உள்ளூர் செய்திகள்

மாணவர் ஒருவருக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டபோது எடுத்தபடம்.

உடன்குடி பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள்

Published On 2022-09-16 09:37 GMT   |   Update On 2022-09-16 09:37 GMT
  • டி.பி.பாலசிங் தலைமை தாங்கி 139 மாணவர்களுக்கு சைக்கிள்களை வழங்கினார்.
  • பள்ளித் தலைமையாசிரியர் விவிங்ஸ்டன் அனைவரையும் வரவேற்றார்.

உடன்குடி:

உடன்குடி கிறிஸ்தியாநகரம் டி.டி.டி.ஏ. மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

உடன்குடி ஊராட்சி ஓன்றியக்குழு தலைவர் டி.பி.பாலசிங் தலைமை தாங்கி 139 மாணவர்களுக்கு சைக்கிள்களை வழங்கினார். பின்னர் தமிழக அரசு சார்பில் மாணவர்களுக்கு செயல்படுத்தப்படும் திட்டங்கள், ஓழுக்கத்துடன் கட்டுப்பாடுடன் வாழ்தல் குறித்து விரிவாக பேசினார்.பள்ளித் தலைமையாசிரியர் விவிங்ஸ்டன் முன்னதாக அனைவரையும் வரவேற்றார். உடன்குடி பேரூராட்சி துணைத்தலைவர் மால்ராஜேஷ், பள்ளி ஆட்சிமன்றக்குழு உறுப்பினர் சாமுவேல், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஜான்பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.உதவி தலைமையாசிரியர் மைக்கேல் நன்றி கூறினார். தி.மு.க. மாவட்டப் பிரதிநிதி ஹீபர், நிர்வாகிகள் கணேசன், கிளார்வின், மோகன் உட்பட ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News