உள்ளூர் செய்திகள்

சில்லி சிக்கன் கடையில் தகராறு வாலிபரை தாக்கிய தந்தை, மகன் கைது

Published On 2023-05-22 09:56 GMT   |   Update On 2023-05-22 09:56 GMT
  • அன்ன தானப்பட்டி ஆத்துக்கா ரன்காடு பகுதியில் சில்லி சிக்கன் கடை வைத்து நடத்தி வருகின்றனர்.
  • சம்பவத்தன்று இவர்களது கடைக்கு வந்தவர்கள், கடை முன்பாக சாலையை அடைத்தபடி இருசக்கர வாகனங்களை அதிகமாக நிறுத்தி இருந்தனர்.

சேலம்:

சேலம் அன்ன தானப்பட்டி சாஸ்திரி நகர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 64). இவரது மகன் விஷ்ணுகுமார் (37). இருவரும் அன்ன தானப்பட்டி ஆத்துக்கா ரன்காடு பகுதியில் சில்லி சிக்கன் கடை வைத்து நடத்தி வருகின்றனர்.

சம்பவத்தன்று இவர்களது கடைக்கு வந்தவர்கள், கடை முன்பாக சாலையை அடைத்தபடி இருசக்கர வாகனங்களை அதிகமாக நிறுத்தி இருந்தனர். அப்போது அந்த வழியாக ஆத்துகாரன் காடு பகுதியைச் சேர்ந்த லலித்குமார் (23) என்பவர் காரில் அந்த வழியாக வந்தார்.

வாகனங்கள் வழியில் நின்றதால் காரில் செல்ல முடியாத அவர் வெங்கடேசன் மற்றும் விஷ்ணுகுமாரிடம் ஏன் இப்படி சாலையை ஆக்கிரமித்து இருசக்கர வாகனங்களை நிறுத்தினீர்கள் என கேட்டுள்ளார்.

இதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் தந்தை, மகன் இருவரும் சேர்ந்து லலித்குமாரை இரும்பு கரண்டியால் தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த லலித்குமார், சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

மேலும் இதுகுறித்து அன்னதானப்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிந்து வெங்கடேசன், விஷ்ணுகுமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News