ஹூப்ளி - தஞ்சாவூர் வாராந்திர சிறப்பு ரெயில் சேவை நீட்டிப்பு
- இரவு 8.25 மணிக்கு புறப்பட்டு மறுநாள் பிற்பகல் 2.15 மணிக்கு தஞ்சாவூரை வந்தடையும்.
- இரவு 7.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் 12.30 மணிக்கு ஹுப்ளி சென்றடையும்.
தஞ்சாவூர்:
ரெயில்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் இருந்து தஞ்சாவூருக்கும், தஞ்சாவூரில் இருந்து ஹூப்ளிக்கும் சேலம், திருச்சி வழியாக வாராந்திர சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
இந்த ரெயில் சேவை ஏற்கனவே நீட்டிக்கப்பட்டது. தற்போது
மேலும் சில நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து திருச்சி கோட்ட ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஹுப்ளியில் இருந்து வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் இரவு 8.25 மணிக்கு புறப்பட்டு மறுநாள் பிற்பகல் 2.15 மணிக்கு தஞ்சாவூரை வந்தடையும் ஹூப்ளி - தஞ்சாவூர் வாராந்திர சிறப்பு ரெயில் (07325) அடுத்த மாதம் 3, 10, 17, 24 மற்றும் 31 ஆகிய தேதிகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
மறு மார்க்கமாக தஞ்சாவூரில் இருந்து செவ்வாய்க்கிழமைகளில் இரவு 7.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் 12.30 மணிக்கு ஹுப்ளி சென்றடையும் தஞ்சாவூர் - ஹுப்ளி வாராந்திர சிறப்பு ரெயில் ( 07326) அடுத்த மாதம் 4, 11, 18, 25 மற்றும் ஆகஸ்ட் 1 ஆகிய தேதிகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.