உள்ளூர் செய்திகள்
எருதாட்டம் நடந்தபோது எடுத்த படம்.
தாரமங்கலம் பகுதியில் எருதாட்டம் கோலாகலம்
- தாரமங்கலம் சுற்று வட்டார கிராமங்களில் தை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு எருதாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.
- இதில் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டு காளைகளை கயிறு கட்டி இருபுறமும் பிடித்தபடி மைதானத்தில் பொம்மைகள் காட்டியப்படி ஆடினர்.
தாரமங்கலம்:
தாரமங்கலம் சுற்று வட்டார கிராமங்களான அழகுசமுத்திரம், அமரகுந்தி, ஓலைப்பட்டி, மல்லியக்குட்டை, செலவடை ஆகிய பகுதிகளில் தை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு எருதாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. அமரகுந்தி மாரியம்மன் கோவில் திடலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 100-க்கும் அதிகமான காளைகள் பங்கேற்றன.
இதில் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டு காளைகளை கயிறு கட்டி இருபுறமும் பிடித்தபடி மைதானத்தில் பொம்மைகள் காட்டியப்படி ஆடினர். இதனை ஆயிரக்கணக்கான பொது மக்கள் கண்டு களித்தனர்.