உள்ளூர் செய்திகள்

மொபட் மீது வேன் மோதி திருமண புரோக்கர் பலி

Published On 2023-03-05 15:10 IST   |   Update On 2023-03-05 15:10:00 IST
  • வேன் எதிர்பாராத விதமாக வேலுசாமி வந்த மொபட் மீது மோதியது.
  • கோபிசெட்டி பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

கோபி:

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள டி.என்.பாளையம் பகுதியை சேர்ந்த வர் வேலுசாமி (வயது 56). இவர் திருமண புரோக்கராக இருந்து வந்தார்.

இந்த நிலையில் வேலு சாமி கோபிசெட்டிபாளை யம்- சத்தியமங்கலம் ரோட்டில் மொபட்டில் சென்று கொண்டு இருந்தார். தொடர்ந்து அவர் லக்கம் பட்டி பிரிவு அருகே சென்றார்.

அப்போது அந்த வழியாக வந்த ஒரு வேன் எதிர்பாராத விதமாக வேலுசாமி வந்த மொபட் மீது மோதியது. இதில் அவர் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.

இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கோபிசெட்டிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேல் சிகிச்சைக்காக பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வேலுசாமி இன்று அதிகாலை பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து கோபிசெட்டி பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News