உள்ளூர் செய்திகள்

பாம்பு கடித்து இளம்பெண் சாவு

Published On 2022-08-19 10:15 GMT   |   Update On 2022-08-19 10:15 GMT
  • வீட்டு காம்பவுண்டில் உள்ள குப்பைகளை சுத்தம் செய்து கொண்டிருந்த இளம்பெண்ணை 4 அடி நீளமுள்ள நாகப்பாம்பு கடித்தது.
  • அப்போது அந்த கோதுமை நாக பாம்பு படம் எடுத்து ஆடியது.

சூரம்பட்டி:

ஈரோடு அருகே உள்ள பஞ்சலிங்கபுரத்தை சேர்ந்தவர் ரகுநாதன். கரூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி திவ்யபாரதி (வயது 26). இவர்களுக்கு திருமணம் ஆகி 4 வருடம் ஆகிறது. இவர்களுக்கு 2 வயதில் ஒரு மகன் உள்ளான்.

இந்நிலையில் இன்று காலை திவ்ய பாரதி வீட்டு காம்பவுண்டில் உள்ள குப்பைகளை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு பதுங்கி இருந்த 4 அடி நீளமுள்ள கோதுமை நாகப்பாம்பு அவரை கடித்தது.

தன்னை பாம்பு கடித்தது என்று திவ்ய பாரதிக்கு தெரிய வில்லை. பூரான் பூச்சி கடித்திருக்கும் என்று நினைத்து அவர் தனது கணவர் மற்றும் உறவினர்களிடம் கூறினார்.

இதைதொடர்ந்து அவர்கள் திவ்ய பாரதியை அருகே உள்ள ஒருவரது வீட்டுக்கு கொண்டு சென்றனர். ஆனால் அதற்குள் பாம்பின் விஷம் அவரது உடல் முழுவதும் பரவியது.

இதனால் அவர் மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த திவ்யபாரதியின் கணவர் மற்றும் உறவினர்கள் அவரை ஈரோடு அரசு ஆஸ்பத்திரி கொண்டு சென்றனர். அவரை பரிசோ தனை செய்த டாக்டர் திவ்ய பாரதி இறந்து விட்டதாக கூறினார்.

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த திவ்ய பாரதியின் கணவர் ரகுநாதன் மற்றும் மாமியார் அங்கேயே மயங்கி விழுந்தனர். அவர்கள் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருமணமாகி 4 வருடமே ஆவதால் ஈரோடு ஆர்.டி.ஓ விசார ணை நடந்து வருகிறது. இது குறித்து மொடக்கு றிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதனையடுத்து திவ்ய பாரதியை பாம்பு தான் கடித்த என்ற தகவல் கிடைத்ததும் பாம்பு பிடி வீரர் யுவராஜ் சம்பவ இடத்துக்கு சென்றார். அங்கு பதுங்கி இருந்த பாம்பை அவர் லாவகமாக பிடித்தார்.

அப்போது அந்த கோதுமை நாக பாம்பு படம் எடுத்து ஆடியது. இதை பார்த்த திவ்ய பாரதியின் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். இளம் பெண்ணை கடித்த நாகப்பாம்பு படம் எடுத்து ஆடிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News