உள்ளூர் செய்திகள்

அத்தனூர் அம்மன் கோவிலில் சுமங்கலி பூஜை

Published On 2023-08-12 10:19 GMT   |   Update On 2023-08-12 10:19 GMT
  • அத்தனூர் அம்பிகைக்கு 108 வலம்புரி சங்காபிஷேகம், சுமங்கலி பிரார்த்தனை நடந்தது.
  • சென்னிமலை முருகன் கோவில் அர்ச்சகர்கள் பெரும் திரளாக குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

சென்னிமலை:

சென்னிமலை மார்க்கண்டேய கோத்திரத்தை சேர்ந்த மூன்றாம் பங்காளிகள் சார்பாக ஆடி வெள்ளியினை முன்னிட்டு சென்னிமலை அடுத்துள்ள முகாசிப்பிடாரியூர், அத்தனூர் அம்மன் கோவிலில் அத்தனூர் அம்பிகைக்கு 108 வலம்புரி சங்காபிஷேகம், நவசக்தி அர்ச்சனை, சுமங்கலி பிரார்த்தனை நடந்தது.

சென்னிமலை ஆதி சைவ அறக்கட்டளை தலைவர் மதி குருக்கள் தலைமையில் 30 வருடங்களுக்கு பிறகு இந்த பூஜையானது சிறப்பாக நடந்தது.

இதில் சென்னிமலை முருகன் கோவில் அர்ச்சகர்கள் பெரும் திரளாக குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News