உள்ளூர் செய்திகள்

தேர்வன்று பள்ளிகளிலேயே வினாத்தாள் பிரிண்ட் எடுத்து கொடுக்க நடவடிக்கை

Published On 2023-03-20 09:44 GMT   |   Update On 2023-03-20 09:44 GMT
  • அரசு பள்ளிகளுக்கு பிரிண்டர் வழங்கப்பட்டு வருகிறது.
  • கேள்வித்தாள்கள் பிரிண்டர் மூலம் எடுத்து மாணவர்களுக்கு வழங்கப்படும்.

ஈரோடு:

தமிழகத்தில் பள்ளிகளுக்கு காலாண்டு, அரையாண்டு, பொதுத்தே ர்வுகள் அனைத்துக்கும் கேள்வித்தாள்கள் ஒரே மாதிரியாக இருக்கும்.

இதற்காக அரசு அச்சகத்தில் கேள்வி தாள்கள் அச்சடிக்க ப்பட்டு பின்னர் அவை மாவட்ட வாரியாக பிரிக்க ப்பட்டு அனுப்பி வைக்கப்படும்.

கேள்வி தாள்கள் அந்தந்த மாவட்ட பள்ளிக்கல்வித்துறை மூலம் பாதுகாப்பாக ஒரு இடத்தில் வைக்கப்பட்டு தேர்வுக்கு முதல் நாள் அந்தந்த பள்ளிகளுக்கு பிரித்து அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

அவ்வாறு அனுப்பும்போது கேள்வி த்தாள்கள் முன்கூட்டியே வெளியே கசிந்து பரபர ப்பை ஏற்படுத்தின. இதனை தடுக்கும் வகையில் பள்ளி கல்வித்துறை புதிய முயற்சியை மேற்கொ ண்டுள்ளது.

அதன்படி இனி அச்சகத்தில் கேள்வித்தாள்கள் அச்சடிக்கப்படாமல் நேரடியாக அந்த பள்ளிகளிலேயே பிரிண்ட் எடுத்து கொடுக்கும் வகையில் ஒவ்வொரு அரசு பள்ளிக்கும் பிரிண்டர் வழங்க முடிவு செய்யப்பட்டது.

முதற்கட்டமாக சோதனை அடிப்படையில் சென்னை, ஈரோடு உள்பட 9 மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளுக்கு பிரிண்டர் வழங்கப்பட்டு வருகிறது.

ஈரோடு மாவட்டத்தில் அரசு பள்ளிகளுக்கு பிரிண்டர் வழங்கப்பட்டு வருகிறது.

பிரிண்டர் வழங்கப்பட்டுள்ள அரசு பள்ளிகளில் தேர்வன்று அந்தந்த தலைமை ஆசிரி யர்களின் இ-மெயிலுக்கு பள்ளி கல்வித்துறை சார்பில் கேள்வித்தாள் அடங்கிய பி.டி.எப் பைல் அனுப்பி வைக்கப்படும்.

தலைமையாசிரியர் அந்தந்த பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப கேள்வித்தாள்களை பிரிண்டர் மூலம் பிரிண்ட் எடுத்து மாணவர்களுக்கு வழங்குவார்கள்.

இதன் மூலம் கேள்வித்தாள் முன்கூட்டியே வெளியே கசிவதை தடுக்க முடியும்.

இது குறித்து ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன் கூறியதாவது:

கேள்வித்தாள்கள் முன்கூட்டியே கசிவதை தடுக்கும் வகையில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளுக்கு பிரிண்டர் வழங்கப்பட்டு வருகிறது. பிரிண்டரை கையாள்வது குறித்து ஏற்கனவே பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது.

தேர்வன்று அந்தந்த பள்ளிகளை சேர்ந்த தலைமை ஆசிரியர்கள் மேற்பார்வையில் கேள்வித்தாள்கள் பிரிண்டர் மூலம் எடுத்து மாணவர்களுக்கு வழங்கப்படும்.

தற்போது மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அரசு பள்ளிகளுக்கு பிரிண்டர் வழங்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News