உள்ளூர் செய்திகள்

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 151 கனஅடியாக குறைந்தது

Published On 2023-05-31 10:00 GMT   |   Update On 2023-05-31 10:00 GMT
  • பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 81.86 அடியாக சரிந்தது.
  • அணையில் இருந்து 855 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

ஈரோடு:

ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

கடந்த சில நாட்களாக மழை பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்துவிட்டது. அதேநேரம் நீர்வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக தொடர்ந்து அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டமும் குறைந்து வந்தது.

இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 81.86 அடியாக சரிந்தது. அணைக்கு வினாடிக்கு 151 கன அடியாக நீர்வரத்து குறைந்தது.

கீழ்பவானி பாசனத்திற்காக 5 கனஅடி, தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனத்திற்கு 800 கன அடி நீர்வந்த நிலையில் இன்று 700 கன அடியாக குறைந்துள்ளது.

குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 150 கன அடி என மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து 855 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News