உள்ளூர் செய்திகள்

பாசனத்திற்காக 2,600 கனஅடி தண்ணீர் வெளியேற்றம்

Published On 2023-09-05 09:29 GMT   |   Update On 2023-09-05 09:29 GMT
  • பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 78.86 அடியாக உள்ளது.
  • அணையில் இருந்து 2,600 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானி சாகர் அணை. 105 அடி கொள்ளளவு பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

கடந்த சில நாட்களாக அணைக்கு நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவில் நீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வந்தது. மழை பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது.

இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 78.86 அடியாக உள்ளது. அனைக்கு வினாடிக்கு 429 கனஅடி தண்ணீர் மட்டுமே வருகிறது.

அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக 2,100 கன அடி, காளிங்கராயன் பாசனத்திற்கு 400 கனஅடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கனஅடி என மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து 2,600 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது.

குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 24.92 கனஅடியும், பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 15.35 கன அடியும், வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் 21.39 கனஅடியாக உள்ளது.

Tags:    

Similar News