உள்ளூர் செய்திகள்

குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின கையெழுத்து இயக்கம்

Published On 2023-06-13 15:40 IST   |   Update On 2023-06-13 15:40:00 IST
குழுந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழியினை கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் அனைத்துத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஏற்றுக்கொண்டனர்.

ஈரோடு:

ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, குழுந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழியினை கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் அனைத்துத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஏற்றுக்கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் கலெக்டர் தலைமையில், குழந்தை தொழிலாளர் முறையினை அகற்று வதற்கான உறுதி மொழி யான 'இந்திய அரசிய லமைப்பு விதிகளின்படி கல்வி பெறுவது குழந்தை களின் அடிப்படை உரிமை என்பதால் 14 வயதுக் குட்பட்ட குழந்தைகளை ஒருபோதும் எந்தவித பணிகளிலும் ஈடுபடுத்த மாட்டேன் எனவும், அவர்கள் பள்ளிக்கு செல்வ தை ஊக்குவிப்பேன் எனவும்,

குழந்தைத் தொழிலாளர் முறையினை முற்றிலுமாக அகற்றிட சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்து வேன் என்றும், தமிழ்நாட்டை குழந்தை தொழிலாளர் அற்ற மாநிலமாக மாற்று வதற்கு என்னால் இயன்ற வரை பாடுபடுவேன் எனவும் உளமார உறுதி கூறு கிறேன்" என அனைத்து த்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மாவட்ட கலெக்டரை பின் தொடர்ந்து வாசித்து உறுதி மொழியை ஏற்றுக்கொ ண்டனர்.

தொடர்ந்து கலெக்டர் ராஜகோபால் சுன்கரா குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின கையெழுத்து இயக்கம் மற்றும் வாகனங்களில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு வாசகம் அடங்கிய ஸ்டிக்கர்களையும் ஒட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சியினையும் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோ ஷினி சந்திரா, தனித்துணை கலெக்டர் (சமூக பாதுபாப்பு திட்டம்) குமரன், தொழி லாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) திருஞான சம்பந்தம், தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட இயக்குநர் சுப்பிரமணியம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சரவணன் மற்றும் அனைத்துத்துறை அலு வலர்கள், பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News