2 லாரி நேருக்கு நேர் மோதியதில் டிரைவர்கள் படுகாயம்
- பெருமுகை தண்ணீர் பந்தல் என்ற இடத்தில் லாரி வந்த போது எதிரே அந்தியூரை சேர்ந்த தங்கவேல் என்பவர் ஓட்டி வந்த லாரியும் நேருக்கு நேர் மோதியது.
- இதில் 2 லாரி டிரைவர்களுக்கும் காலில் பலத்த காயமடைந்தது.
டி.என்.பாளையம்:
ஈரோடு மாவட்டம் பண்ணாரி அருகே ராஜன் நகரில் இருந்து புளியம்பட்டி பகுதியை சேர்ந்த பரமேஸ்வரன் என்கிற ராஜா என்பவர் சம்பவத்தன்று இரவு லோடு ஏற்றிக்கொண்டு பரமத்தி வேலூர் செல்வ தற்காக சத்தியமங்கலம்-அத்தாணி சாலையில் லாரியை ஓட்டி வந்துள்ளார்.
இந்நிலையில் இரவு சுமார் 12.30 மணியளவில் பெருமுகை தண்ணீர் பந்தல் என்ற இடத்தில் லாரி வந்த போது எதிரே அந்தியூரை சேர்ந்த தங்கவேல் என்பவர் ஓட்டி வந்த லாரியும் நேருக்கு நேர் மோதியது.
இதில் 2 லாரி டிரைவர்களுக்கும் காலில் பலத்த காயமடைந்தது. இதனையடுத்து உடனே அவர்களை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்ைசக்காக அனுமதிக்க ப்பட்டனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்து பங்களாப்புதூர் போலீசார் விசாரணை செய்தனர். இதில் 2 லாரியின் முன்பக்கமும் சேதமானது.
மேலும் அந்தியூரில் இருந்து ஓட்டி வந்த லாரி டிரைவரின் தூக்க கலக்கதால் இந்த விபத்து நடந்ததாக தெரியவந்தது.