உள்ளூர் செய்திகள்

மின் இணைப்பு கொடுக்கும் போது மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலி

Published On 2023-07-17 09:03 GMT   |   Update On 2023-07-17 09:03 GMT
  • புதிய வீட்டிற்கு மின் இணைப்புகள் வழங்குவதற்காக அருகில் உள்ள வீட்டில் இருந்து மின்சாரம் எடுக்கும் போது மின்சாரம் பாய்ந்ததில் முருகன் தூக்கி வீசப்பட்டார்.
  • அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

பென்னாகரம்,

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே புளிக்கரை பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (வயது45). எலக்ட்ரீசியன். இவர் தனது உறவினரான பென்னாகரம் எம்.கே.எஸ். நகர் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி என்பவரின் வீட்டிற்கு எலக்ட்ரீசியன் வேலை செய்ய வந்துள்ளார்.

புதிய வீட்டிற்கு மின் இணைப்புகள் வழங்குவதற்காக அருகில் உள்ள வீட்டில் இருந்து மின்சாரம் எடுக்கும் போது மின்சாரம் பாய்ந்ததில் முருகன் தூக்கி வீசப்பட்டார்.

இதில் படுகாயம் அடைந்த முருகனை அக்கம் பக்கத்தினர் மீட்டு பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக உடல் அனுப்பப்பட்டது.

இது குறித்து பென்னாகரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News