உள்ளூர் செய்திகள்

அளவுக்கு அதிகமாக மாத்திரை சாப்பிட்ட மூதாட்டி சாவு

Published On 2023-04-11 15:15 IST   |   Update On 2023-04-11 16:08:00 IST
  • அளவுக்கு அதிகமான மாத்திரையை சாப்பிட்டு மயங்கி விழுந்துள்ளார்.
  • சிகிச்சை பெற்று வந்த நாகம்மாள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

தருமபுரி,

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே உள்ள பொம்ம பள்ளி பகுதியை சேர்ந்தவர் நாகம்மாள் (வயது85). சம்பவத்தன்று இவர் அளவுக்கு அதிகமான மாத்திரையை சாப்பிட்டு மயங்கி விழுந்துள்ளார்.

அக்கம் பக்கத்தினர் இவரை மீட்டு தருமபுரி அரசு கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சிகிச்சை பெற்று வந்த நாகம்மாள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து காரிமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News