உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

நிலக்கோட்டை அருகே வரதட்சணை கொடுமைப்படுத்திய 5 பேர் மீது வழக்கு

Published On 2022-06-29 05:05 GMT   |   Update On 2022-06-29 05:05 GMT
  • கூடுதல் வரதட்சணை கேட்டு கணவர் குடும்பத்தினர் கொடுமைப்படுத்தியதால் பாதிக்கப்பட்ட பெண் கோர்ட்டில் வழக்கு தொடந்தார்.
  • 5 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

நிலக்கோட்டை:

நிலக்கோட்டை அருகில் உள்ள கல்லுப்பட்டியை சேர்ந்த ரவிச்சந்திரன் மனைவி கார்த்திகை ராணி(30). இவர்களுக்கு கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் நடந்தது.

திருமணத்தின்போது 20 பவுன் நகை, ரொக்கப்பணம் மற்றும் சீரிவரிசைகள் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது. இந்நிலையில் மேலும் 30 பவுன் நகை, ரூ.4 லட்சம் பணம் வாங்கி வரச்சொல்லி கணவர் ரவிச்சந்திரன், மாமனார், மாமியார் மற்றும் உறவினர்கள் கொடுமைப்படுத்தி வந்துள்ளனர்.

இதுகுறித்து கார்த்திகைராணி நிலக்கோட்டை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்குதொடுத்தார். இதுகுறித்து விசாரணை நடத்த அனைத்து மகளிர் போலீசாருக்கு கோர்ட்டு உத்தரவிட்டது.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பேபி வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய ரவிச்சந்திரன், பேபி, காமாட்சி, அழகுமலை, மலர்கொடி ஆகிய 5 பேர்மீதும் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News