உள்ளூர் செய்திகள்

நடத்தையில் சந்தேகம்: மனைவியின் கழுத்தை அறுத்து கொல்ல முயன்ற கணவன்

Published On 2022-07-05 09:12 GMT   |   Update On 2022-07-05 09:12 GMT
  • நடத்தையில் சந்தேகப்பட்டதால் மனைவியின் கழுத்தை அறுத்து கொல்ல கணவன் முயற்சித்தார்.
  • ஆதிகேசவன் வீட்டில் இருந்த கத்தியை எடுத்தார். பின்னர் மனைவி என்றுகூட பாராமல் சரோஜினியின் கழுத்தை அறுத்தார்.

கடலூர்: 

கடலூர் மாவட்டம் பண்ருட்டி யூனியன் ஆபீஸ் பகுதியை சேர்ந்தவர் ஆதிகேசவன். கூலி தொழிலாளி. அவரது மனைவி சரோஜினி (வயது 42). கடந்த சிலநாட்களாக ஆதிகேசவன் தனது மனைவியின் நடத்தையின் சந்தேகப்பட்டார். இதனால் 2 பேருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இன்று காலையும் பிரச்சினை வெடித்தது. ஆத்திரம் அடைந்த ஆதிகேசவன் வீட்டில் இருந்த கத்தியை எடுத்தார். பின்னர் மனைவி என்றுகூட பாராமல் சரோஜினியின் கழுத்தை அறுத்தார். இதில் ரத்தம் பீறிட்ட நிலையில் சரோஜினி அலறித்துடித்தவாறு கீழே விழுந்தார்.

சத்தம் கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடிவந்தனர். ஆட்கள் வருவதை அறிந்த ஆதிகேசவன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். உயிருக்கு போராடிய சரோஜினி பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரன் வழக்குபதிந்து ஆதிகேசவனை தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News