உள்ளூர் செய்திகள்

அவிநாசியில் நாய் கடித்து மான் பலி

Published On 2022-06-05 11:11 GMT   |   Update On 2022-06-05 11:11 GMT
  • அவினாசி சுற்றுவட்டார பகுதியில் கடும் வெப்பம் காணப்படுகிறது.
  • வனத்துறையினர் மானின் உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்து அடக்கம் செய்தனர்.

அவினாசி:

அவினாசி ஒன்றியம் தெக்கலூர், புதுப்பாளையம், சாமந்தங்கோட்டை உள்ளிட்ட காட்டுப்பகுதியில் ஏராளமான மான்கள் வசிக்கின்றன. இரைத்தேடியும், தண்ணீருக்காகவும் மான்கள் காட்டைவிட்டு வெளியேறும். அப்போது நாய்கள் மான்களை கடித்து குதறுகின்றன. கடந்த ஒரு மாத காலமாக அவினாசி சுற்றுவட்டார பகுதியில் கடும் வெப்பம் காணப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று தெக்கலூர் காட்டுப்பகுதியிலிருந்து இரண்டு மான்கள் தண்ணீர் தேடி தெக்கலூர் ஏரிப்பாளையத்தில் ஒரு கோவில் அருகே வந்துள்ளது. இதைப் பார்த்து அங்கிருந்த தெருநாய்கள் மான்களை துரத்தி சென்று கடித்துள்ளது. இதில் ஒரு மான்காட்டுக்குள் மறைந்து தப்பியது. மற்றொரு 4 வயது மான் நாய்கள் கடித்ததில் உயிரிழந்தது. தகவலறிந்த வனத்துறையினர் மானின் உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்து அடக்கம் செய்தனர்.

Tags:    

Similar News