உள்ளூர் செய்திகள்

சுரண்டை தீயணைப்பு நிலையம் சார்பில் பேரிடர் மேலாண்மை ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்ற காட்சி.

சுரண்டை தீயணைப்பு நிலையம் சார்பில் பேரிடர் மேலாண்மை ஒத்திகை

Published On 2022-06-24 09:13 GMT   |   Update On 2022-06-24 09:13 GMT
  • பேரிடர் நேரங்களில் தீயணைப்பு துறையினரின் உதவிகளை பெறுவது, குறித்து விளக்கி பயிற்சி அளித்தனர்.
  • தாசில்தார் தெய்வசுந்தரி முன்னிலை வகித்தார்

சுரண்டை:

சுரண்டை தீயணைப்பு நிலையம் சார்பில் பேரிடர் மேலாண்மை ஒத்திகை நிகழ்ச்சி வீ.கே.புதூர் அருந்தவபிராட்டி குளத்தில் நடந்தது.

நிகழ்ச்சிக்கு தாசில்தார் தெய்வசுந்தரி முன்னிலை வகித்தார். ‌சுரண்டை தீயணைப்பு நிலைய அலுவலர் முத்து செல்வன், தலைமையில் போக்குவரத்து அலுவலர் பாலச்சந்தர், சிறப்பு நிலைய அலுவலர் ரவீந்திரன், சாமி, உலகநாதன், குமார் பொன்ராஜ் ஆகியோர் தீயணைப்பு துறையின் பணிகள் தீவிபத்து, வெள்ளம், கட்டிட இடிபாடுகள் மற்றும் பேரிடர் நேரங்களில் தீயணைப்பு துறையினரின் உதவிகளை பெறுவது, குறித்து விளக்கி பயிற்சி அளித்தனர்.

ஆர்.ஐ. ராசாத்தி, கண்ணன், கிராம நிர்வாக அதிகாரி ராதாகிருஷ்ணன், கிராம உதவியாளர் முருகராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News