உள்ளூர் செய்திகள்

திண்டிவனம் நகராட்சி அலுவலகம் அருகே பிணமாக கிடந்த பார் ஊழியர்

Published On 2023-01-23 16:29 IST   |   Update On 2023-01-23 16:29:00 IST
  • கண்ணபிரான்.திண்டிவனம் தண்ணீர் டேங்க் எதிரில் உள்ள அரசு மதுபான கடையில் இயங்கி வருகின்ற பார் ஒன்றில் பணிபுரிந்து வந்தார்.
  • சந்தேகம் அடைந்த பொது மக்கள் அவரை எழுப்ப முயற்சி செய்தனர். அப்போது, அவர் படுத்த நிலையில் இறந்து கிடப்பது தெரிய வந்தது.

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே உள்ள ராமாபுரம் பகுதியைச் சேர்ந்தவர். கண்ணபிரான்.திண்டிவனம் தண்ணீர் டேங்க் எதிரில் உள்ள அரசு மதுபான கடையில் இயங்கி வருகின்ற பார் ஒன்றில் பணிபுரிந்து வந்தார்.இவர் இன்று காலை திண்டிவனம் பழைய நகராட்சி அலுவலகம் எதி ரில் உள்ள கடை யின் அருகே வந்து அமர்ந்துள்ளார் .பின்பு அந்த இடத்தில் படுத்தவர் வெகு நேரம் படுத்து இருந்ததால், சந்தேகம் அடைந்த பொது மக்கள் அவரை எழுப்ப முயற்சி செய்தனர். அப்போது, அவர் படுத்த நிலையில் இறந்து கிடப்பது தெரிய வந்தது.

இது குறித்து பொது மக்கள் போலீஸ் நிலை யத்திற்கு அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இறந்து கிடந்தவர் யார் என்ற கோணத்தில் விசாரணை செய்து பின்பு அவரது ஆதார் அட்டையில் உள்ள முகவரிக்கு தகவல் தெரி வித்தனர். பின்பு அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு, இது குறித்து வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை செய்து வருகின்றார்கள்.

Tags:    

Similar News