உள்ளூர் செய்திகள்

சீர்காழி சட்டைநாதர் கோவிலில் நடைபெற்று வரும் திருப்பணிகளை தருமபுரம் ஆதீனம் பார்வையிட்டார்.

சட்டைநாதர் கோவிலில் நடந்து வரும் திருப்பணிகளை பார்வையிட்ட தருமபுரம் ஆதீனம்

Published On 2022-06-29 09:37 GMT   |   Update On 2022-06-29 09:37 GMT
  • 7-ம் நூற்றாண்டில் இக்கோயில் பிரம்ம தீர்த்தக்குளத்தில் திருஞானசம்பந்த பெருமானுக்கு உமையம்மை ஞானபால் வழங்கிய தலம்.
  • கும்பாபிஷேகம் நடத்த தீர்மானிக்கப்பட்டு அதற்கான திருப்பணிகள் கடந்த ஆண்டு தொடங்கி நடைபெற்று வருகிறது.

சீர்காழி:

சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டைநாதர் கோயில் உள்ளது.இக்கோயிலில் திருநிலைநாயகிஅம்மன் உடனாகிய பிரம்ம புரீஸ்வர ரர்சு வாமி அருள்பாலிக்கிறார். இங்கு மலைகோயிலில் தோணியப்பர்-உமாமகே ஸ்வரிஅம்மன், சட்டைநாதர் ஆகிய சுவாமிகள் காட்சி தருகின்றனர். 7-ம் நூற்றா ண்டில் இக்கோயில் பிரம்ம தீர்த்தக் குளத்தில் திருஞானசம்பந்த பெருமா னுக்கு உமையம்மை ஞானபால் வழங்கிய ஸ்தலம்.

ஆதலால் தனி கோயிலில் திருஞானசம்பந்தர் மற்றும் காசிக்கு அடுத்தப்படியாக அஷ்டபைரவர்கள் தனி சன்னதியில் எழுந்தரு ளியுள்ளனர். சட்டைநாதர் கோயிலில் தருமபுரம் ஆதீனம் 26வது குருமகாசந்நிதானம் முன்னிலையில் கடந்த 1991ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இந்நிலையில்30ஆண்டுக ளுக்கு பிறகு தருமபுரம் ஆதீனம் 27ஆவதுகுருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலா மணி தேசிக ஞானசம்பந்த பரமா ச்சாரிய சுவாமிகள் ஏற்பாட்டின்பேரில் கும்பாபிஷேகம் விழா நடத்த தீர்மானிக்கப்பட்டு அதற்கான திருப்பணிகள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தருமபுரம் ஆதீனம் மற்றும் மதுரை ஆதீனம் 293ஆவது மடாதிபதி திருக்கரங்களால் அடிக்கல் நாட்டப்பட்டு தொடங்கி நடைபெற்று வருகிறது.

அதுமுதல் கோயில் 4 கோபுரங்கள், சுவாமி, அம்மன், திருஞானசம்பந்தர், மலைகோயில் உள்ளிட்ட சன்னதிகளில் திருப்பணி கள் தீவிரமாக நடந்து வருகிறது. இதோடு தொட ங்கிய கட்டளை மடம் கிரகபிரவேஷம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடந்து முடிந்த நிலையில் தற்போது திருப்பணிகள் தீவிரமடைந்துள்ளது. கோயில் பிரகாரங்கள் மற்றும் மேல் தளங்களில் சிதிலமடைந்த கருங்க ற்கள் பெயர்த்து அப்புற ப்படுத்தப்பட்டு புதிய கருங்கற்கள் பதிக்கும் பணி தற்போது தீவிரமாக நடந்து வருகிறது.

பல டன் எடைக்கொண்ட கருங்கற்கள் வரவழைக்க ப்பட்டு கிரேன் மூலம் இறக்கி வைக்கப்பட்டுள்ள நிலையில் திருப்பணி ஊழியர்கள் கருங்கற்கள் பிரகாரங்களில் பதித்து வருகின்றனர். பக்தர்கள் வழிபாட்டிற்கு இடையூறு இல்லாமல் திருப்பணிகள் ஒரு புறம் சிறப்பாக நடைபெற்று வரும் நிலையில் திருப்பணிகளை அவ்வபோது தருமபுரம் ஆதீனம் 27வதுகுருமகா சந்நிதானம் நேரில் பார்வை யிட்டு ஆலோசனைகளை வழங்கிவருகிறார்.விரை வில் திருப்பணிகள் நிறைவு ப்பெற்று அடுத்த ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News