உள்ளூர் செய்திகள்

சோட்டாணிக்கரை பகவதி அம்மன் கோவிலுக்கு 2 டன் மலர்கள் பக்தர் காணிக்கையாக வழங்கினார்

Published On 2022-12-07 10:32 GMT   |   Update On 2022-12-07 10:33 GMT
  • நிலக்கோட்டை மாலை கட்டும் தொழிலாளர்களை கொண்டு அம்மனுக்கு மாலைகள், 150 நிலை மாலை, தோரணங்கள் கட்டுவதற்கான பூக்கள் கட்டும் பணியில் ஈடுபட்டனர்.
  • சோட்டாணிக்கரை பகவதி அம்மன் கோவிலில் திருக்கார்த்திகை மகஉற்சவத்தில் நிலக்கோட்டையில் இருந்து கொண்டு செல்லப்பட்ட மாலைகள், தோரணங்கள் கோவிலை அலங்கரிக்க உள்ளன.

நிலக்கோட்டை:

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே மைக்கேல்பாளையம் ஊராட்சி தலைவர் சுகந்தா. இவர் கேரள மாநிலம் சோட்டாணிக்கரை பகவதி அம்மன் கோவிலில் நடைபெறும் திருக்கார்த்திகை மகஉற்சவ நிகழ்ச்சிக்கு கோவில் முழுவதும் மலர்களால் அலங்கரிக்கும் வகையில் மாலைகள், தோரணங்கள் செய்வதாக நேர்ந்து கொண்டார்.

அதன்படி சோட்டாணிக்கரை பகவதி அம்மன் கோவிலில் இன்று நடைபெற உள்ள மக உற்சவத்துக்கு நிலக்கோட்டை மலர் சந்தையில் இருந்து பட்டு ரோஸ், 4 வண்ணங்களில் செவ்வந்தி, அரளி, செண்டுமல்லி, கோழிக்கொண்டை உள்பட 9 வகையான மலர்கள் 2 டன் அனுப்பப்பட்டது.

நிலக்கோட்டை மாலை கட்டும் தொழிலாளர்களை கொண்டு அம்மனுக்கு மாலைகள், 150 நிலை மாலை, தோரணங்கள் கட்டுவதற்கான பூக்கள் கட்டும் பணியில் ஈடுபட்டனர்.

நேற்று மாலை 2 டன் மலர்களும், மாலை, தோரணங்களாக கட்டி முடிக்கப்பட்டு கேரளாவுக்கு சுகந்தா குடும்பத்தினர் புறப்பட்டனர். இன்று சோட்டாணிக்கரை பகவதி அம்மன் கோவிலில் திருக்கார்த்திகை மகஉற்சவத்தில் நிலக்கோட்டையில் இருந்து கொண்டு செல்லப்பட்ட மாலைகள், தோரணங்கள் கோவிலை அலங்கரிக்க உள்ளன.

Tags:    

Similar News