உள்ளூர் செய்திகள்

சேலத்தில் 6 பேருக்கு கொரோனா தொற்று

Published On 2022-06-16 09:16 GMT   |   Update On 2022-06-16 09:16 GMT
சேலத்தில் 6 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

சேலம்:

சேலத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு சற்று அதிகரித்து வருகிறது.

தினமும் 2 முதல் 3 பேர் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று முன்தினம் 5 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று புதியதாக 6 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

மாநகராட்சி பகுதிகளில் 3 பேர், பனமரத்துப்பட்டி வட்டாரத்தில் 2 பேர், வீரபாண்டி வட்டாரத்தில் ஒருவர் என 6 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிப்பு அதிகரித்து வருவதால், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

Tags:    

Similar News