உள்ளூர் செய்திகள்

சேலத்தில் 20 பேருக்கு கொரோனா

Published On 2022-09-26 09:23 GMT   |   Update On 2022-09-26 09:23 GMT
  • மற்ற மாவட்டங்களில் இருந்து சேலம் வந்த 8 பேருக்கு கொரோனா பாதிப்பு
  • 2-வது அலை, 3-வது அலைகளில் சிக்கி மொத்தம் 1765 பேர் இறந்துள்ளனர்.

சேலம்:

சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரிப்பதும், குறைவதுமாக என மாறி மாறி நிலவி வருகிறது. சேலத்தில் நேற்று 20 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சேலம் மாநகராட்சியில் 8 பேர், சேலம் சுகாதார மாவட்டத்தில் சேலம், எடப்பாடி பகுதிகளில் 2 பேர், ஆத்தூர் சுகாதார மாவட்டத்தில் ஆத்தூர், வாழப்பாடி பகுதிகளில் 2 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதுபோல் தருமபுரி, கடலூர், ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் இருந்து சேலம் வந்த 8 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகள், தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் முதல் அலை, 2-வது அலை, 3-வது அலைகளில் சிக்கி மொத்தம் 1765 பேர் இறந்துள்ளனர்.

Tags:    

Similar News