உள்ளூர் செய்திகள்

சேலம் மாவட்டத்தில் மழை நீடிப்பு

Published On 2022-07-30 06:39 GMT   |   Update On 2022-07-30 06:39 GMT
  • சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.
  • ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி.

சேலம்:

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்று காடையாம்பட்டி, மேட்டூர் பகுதிகளில் கன மழை பெய்தது.

இந்த கன மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியது.

சேலம் மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்து நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மாவட்டத்தில் அதிக பட்சமாக காடையாம்பட்டியில் 26 மி.மீ. மழை பெய்துள்ளது. மேட்டூர் 22.2, ஓமலூர் 10.4, எடப்பாடி 1.4 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 60 மி.மீ. மழை பெய்துள்ளது. இன்று காலையுமம் வானம் மேக மூட்டத்துடன் காட்சி அளித்தது.

Tags:    

Similar News