உள்ளூர் செய்திகள்

குருபரப்பள்ளியில் ரூ.1.21 கோடி மதிப்பில் வகுப்பறை கூடுதல் கட்டிடம் கட்டும் பணி

Published On 2023-10-17 15:39 IST   |   Update On 2023-10-17 15:39:00 IST
  • மதியழகன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
  • 1 கோடியே 20 லட்சத்து 88 ஆயிரம் மதிப்பில் கட்டிடம் கட்டுவதற்கான பணி துவங்கியது.

கிருஷ்ணகிரி,  

கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அரசு மேல்நி லைப்பள்ளியில் குருபரப் பள்ளி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான மாணவ, மாண விகள் படித்து வருகின்றனர். இவர்களுக்கு போதிய வகுப்பறை வசதி இல்லாமல் இருந்தனர். இதையடுத்து நபார்டு திட்டத்தின் கீழ் ரூ. 1 கோடியே 20 லட்சத்து 88 ஆயிரம் மதிப்பில் 8 வகுப்ப றைகள் கொண்ட கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கான கட்டுமான பணி நேற்று துவங்கியது.

இந்த கட்டிடத்தின் கட்டு மான பணியை கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான மதியழகன் நேற்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், கிழக்கு மாவட்ட தி.மு.க. அவைத்த லைவர் தட்ரஅள்ளி நாகராஜ், கிழக்கு ஒன்றிய செயலாளர் கோவிந்தன், மேற்கு ஒன்றிய செயலாளர் தனசேகரன், குருபரப்பள்ளி தலைவர் கோவிந்தன், பெத்த னப்பள்ளி தலைவர் பழனி, ஓட்டுனர் அணி மாணிக்கம், கவுன்சிலர் சந்திரன், முன்னாள் தலைவர் கேபிள்.மணி, விவசாய அணி மோகன், சென்றாயன், சேகர், காந்திஜிலானி, திருப்பதி, வெங்கடாசலம், சிவாஜி, முருகன், தலைமை ஆசிரியர் ஆரோக்கியம், சுரேஷ் உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Similar News