உள்ளூர் செய்திகள்

கொத்தடிமை, குழந்தை தொழிலாளர்கள் குறித்து புகார்களை எண்ணில் தெரிவிக்கலாம்

Published On 2023-05-05 09:40 GMT   |   Update On 2023-05-05 09:40 GMT
  • குழந்தைத் தொழிலாளர்கள் குறித்த புகார்களை தெரிவிக்க, பி.எஸ்.என்.எல். மூலம் 155214 உருவாக்கப்பட்டு செயல்படுத்த ப்பட்டுள்ளது.
  • கட்டண மில்லா தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு, பொதுமக்கள் தங்கள் புகார்களை பதிவு செய்யலாம்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்ட த்தில் கொத்தடிமை மற்றும் குழந்தைத் தொழிலாளர்கள் குறித்த புகார்களை தெரிவிக்க, பொதுமக்கள் எளிதில் நினைவில் வைத்துக் கொள்ளும் பொருட்டு பி.எஸ்.என்.எல். மூலம் 155214 உருவாக்கப்பட்டு செயல்படுத்த ப்பட்டுள்ளது.

கொத்தடிமை மற்றும் குழந்தை தொழிலாளர்கள் குறித்த புகார்களை தெரிவிக்க ஏற்கனவே உள்ள 1800 4252 650 என்ற கட்டண மில்லா தொலைபேசி எண்ணிலும், கூடுதலாக ஏற்படுத்த ப்பட்டுள்ள 155214 என்ற கட்டண மில்லா தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு, பொதுமக்கள் தங்கள் புகார்களை பதிவு செய்யலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News