உள்ளூர் செய்திகள்

தூய்மை பணியை ஆய்வு செய்த நகர்மன்ற தலைவர் துர்காபரமேஸ்வரி.

சீர்காழி சட்டநாதர் சுவாமி கோயிலை சுற்றி தூய்மைபணி தீவிரம்

Published On 2023-05-14 09:11 GMT   |   Update On 2023-05-14 09:11 GMT
  • சட்டநாதர் சுவாமி கோயிலில் 32ஆண்டுகளுக்கு பிறகு வரும் 24-ம் தேதி கும்பாபிஷேகம் நடை பெற உள்ளது.
  • வடக்குகோபுர வாசல் பகுதியில் தேங்கி கிடந்த குப்பைகளை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்றது.

சீர்காழி:

சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டநாதர் சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் 32ஆண்டுகளுக்கு பிறகு வரும் 24-ம் தேதி கும்பாபிஷேகம் நடை பெறவுள்ளது.

இதற்கான திருப்பணிகள் தொடங்கி தற்போது நிறைவ டைந்துவருகிறது.

இதனிடையே சட்டநாதர் சுவாமி கோயில் வடக்கு கோபுர வாசல் பகுதியில் தேங்கி கிடந்த குப்பைகளை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்றது. நகராட்சி தூய்மை பணியாளர்கள் பலர் இப்பணியில் ஈடுப்பட்டனர்.

அங்கிருந்த தேங்காய் மட்டைகள், குப்பைகள் முழுமையாக அகற்றப்பட்டுவருகிறது.

மேலும் கும்பாபிஷேத்திற்கு பல முக்கிய பிரமுகர்கள் வரயிருப்பதால் வடக்கு கோபுர வாசல் எதிரே உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றிட நகராட்சி நிர்வாகம் கடை நடத்துபவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தூய்மை பணிகள் நடைபெறுவதை நகர்மன்ற தலைவர் துர்காபர மேஸ்வரி, ஆணையர் வாசுதேவன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

Tags:    

Similar News