உள்ளூர் செய்திகள்

கடற்கரையில் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்ட மாணவ-மாணவிகள்.

மீன்பிடி துறைமுகத்தில் தூய்மை பணி

Published On 2022-09-18 10:04 GMT   |   Update On 2022-09-18 10:04 GMT
  • சர்வதேச கடற்கரை தூய்மை நாளை முன்னிட்டு கடற்கரையில் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது.
  • மீனவர்கள் கடற்கரையை சுத்தம் செய்ததை தொடர்ந்து கடலோர பாதுகாப்பு குறித்து அறிவுரை வழங்கப்பட்டது.

பேராவூரணி:

சேதுபாவாசத்திரம் கடற்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மனோரா படகு இறங்குதளம், மல்லிப்பட்டினம் மீன்பிடி துறைமுகம் ஆகிய இரு இடங்களில் சர்வதேச கடற்கரை தூய்மை நாளை முன்னிட்டு பட்டுக்கோட்டை கடலோர பாதுகாப்பு குழும இன்ஸ்பெக்டர் மஞ்சுளா தலைமையில் கடற்கரையில் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது.

இதில், கடலோர சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன், ராஜசேகர், மீன்வளத்துறை இன்ஸ்பெக்டர் கெங்கேஸ்வரி, ஓம்கார் பவுண்டேஷன் பாலாஜி, அதிராம்பட்டினம் காதிர்முகைதீன் கல்லூரி மாணவ, மாணவிகள், பள்ளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி தேசிய மாணவர் படை மாணவர்கள், கிராம முக்கியஸ்தர்கள், மீன்வளத் துறையினர், கடலோர காவல் குழுமத்தினர், மீனவர்கள் கடற்கரையை சுத்தம் செய்தனர். தொடர்ந்து கடலோர பாதுகாப்பு குறித்து அறிவுரை வழங்கப்பட்டது.

Tags:    

Similar News