உள்ளூர் செய்திகள்

தட்சணமாற நாடார் சங்க கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்பு தொடக்க விழா

Published On 2023-07-04 08:55 GMT   |   Update On 2023-07-04 08:55 GMT
  • விழாவுக்கு கல்லூரி செயலாளர் வி.பி.ராமநாதன் நாடார் தலைமை தாங்கினார்.
  • நிகழ்ச்சியில் மாணவ- மாணவிகள் தங்கள் பெற்றோருடன் கலந்து கொண்டனர்.

வள்ளியூர்:

தெற்கு கள்ளிகுளத்தில் உள்ள நெல்லை தட்சணமாற நாடார் சங்கம் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்பு தொடக்க விழா பத்மஸ்ரீ டாக்டர். பா. சிவந்தி ஆதித்தனார் மாணவர் அரங்கத்தில் நடைபெற்றது.

விழாவில் கல்லூரியின் செயலாளர் வி.பி. ராமநாதன் நாடார் தலைமை தாங்கினார். துணை முதல்வர் டி. சாந்தி வரவேற்றார். தமிழ்த்துறை தலைவர் நிர்மலா தொடக்க உரையாற்றினார். முதல்வர் து. ராஜன் கலந்து கொண்டு பேசினார்.

நிகழ்ச்சியில் மாணவ- மாணவிகள் தங்கள் பெற்றோருடன் கலந்து கொண்டனர். கல்லூரிக்குழு உறுப்பினர் எஸ்.கே.டி.பி. காமராஜ் மற்றும் ஆட்சிக்குழு உறுப்பினர் பண்ணை கே. செல்வகுமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். தொடர்ந்து மாணவர்களின் பெற்றோருடன் கலந்துரையாடல் நடைபெற்றது. முடிவில் சுயநிதிப்பிரிவு வணிகவியல்துறை தலைவர் எம். மனோகர் நன்றி கூறினார்.

Tags:    

Similar News