உள்ளூர் செய்திகள்

தாரமங்கலம் அருகே நிலத்தகராறில் மோதல்;7 பேர் மீது வழக்கு

Published On 2023-03-23 15:05 IST   |   Update On 2023-03-23 15:05:00 IST
  • வெள்ளையன் குடும்பத்தாருக்கும் இடையே நிலபிரச்சனை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது.
  • இது தொடர்பாக சம்பவத்தன்று ஏற்பட்ட மோதலில் இருதரப்பும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.

தாரமங்கலம்:

தாரமங்கலம் அருகிலுள்ள பள்ளிகொண்டான்பாறை, வீதன்வளவு பகுதியை சேர்ந்தவர் சுப்ரமணி. இவரது குடும்பத்திற்கும், அதே பகுதியை சேர்ந்த வெள்ளையன் குடும்பத்தாருக்கும் இடையே நிலபிரச்சனை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது.

இது தொடர்பாக சம்பவத்தன்று ஏற்பட்ட மோதலில் இருதரப்பும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இந்த மோதல் தொடர்பாக பழனி கொடுத்த புகாரின் படி வெள்ளையன், கலா, காளியப்பன், குமரன் ஆகியோர் மீதும், வெள்ளையன் கொடுத்த புகாரின் பேரில் சுப்ரமணி,பழனி, சக்திவேல் ஆகியோர் மீது தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News