உள்ளூர் செய்திகள்

படைவெட்டி மாரியம்மன் கோவிலில்  திருவிழா நடந்து.

படைவெட்டி மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா

Published On 2023-05-17 09:21 GMT   |   Update On 2023-05-17 09:21 GMT
  • சீர்வரிசை பொருட்களை தங்கமுத்து மாரியம்மன் கோவிலில் வைத்து வழிபட்டனர்.
  • தொடர்ந்து, சிறப்பு வழிபாடு, ஆராதனை நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

பாபநாசம்:

பாபநாசத்தில் உள்ள படைவெட்டி மாரியம்மன் கோவிலில் 9-ம் ஆண்டு சித்திரை திருவிழா காப்பு கட்டுதல், கரகம் காவடி, பால்குடம் எடுத்தல் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளுடன் நடைபெற்றது.

விழாவின் நிறைவு நாளில் ஊர்மக்கள் ஒன்றாக திரண்டு அம்மனை தங்கள் வீட்டு பெண்ணாக நினைத்து புடவை, பழம், பூ உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களை தங்கமுத்து மாரியம்மன் கோவிலில் வைத்து வழிபட்டனர்.

பின்னர், அவற்றை ஊர்வலமாக எடுத்து வந்து படைவெட்டி மாரியம்மன் கோவிலை வந்தடைந்தனர்.

இதனை தொடர்ந்து அம்மனுக்கு சீர்வரிசை பொருட்களை வைத்து சிறப்பு வழிபாடு, ஆராதனை நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

தொடர்ந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பா லித்தார். இதில் அப்பகுதி மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News