உள்ளூர் செய்திகள்
சித்தையன்கோட்டையில் மூதாட்டியை தாக்கி நகை பறிப்பு
- மூதாட்டியிடம் மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் கண் இமைக்கும் நேரத்தில் நகையை பறித்துச்சென்றனர்.
- புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் சித்தையன்கோட்டை காலனியைச் சேர்ந்தவர் கருப்பையா. சலவைத் தொழிலாளி. இவரது மனைவி பஞ்சவர்ணம் (60). இவர் இன்று காலை தனது வீட்டில் இருந்து இயற்கை உபாதை கழிப்பதற்காக நடந்து சென்று கொண்டு இருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் கண் இமைக்கும் நேரத்தில் அவர் அணிந்திருந்த 1.5 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு ஓடி விட்டனர்.
இது குறித்து செம்பட்டி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.