உள்ளூர் செய்திகள்

பேராலய திருவிழா; மும்பை- வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரெயில் இயக்கம்

Published On 2023-08-26 15:24 IST   |   Update On 2023-08-26 15:24:00 IST
  • நாளை காலை ரெயில் புறப்பட்டு மறுநாள் இரவு வேளாங்கண்ணி சென்றடையும்.
  • அதிகாலை 12.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 12.30 மணிக்கு செகந்தராபாத் சென்றடையும்.

நாகப்பட்டினம்:

வேளாங்கண்ணி பேராலய திருவிழாவை முன்னிட்டு மும்பை, செகந்திரபாத் ஆகிய ரெயில் நிலையங்களில் இருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு கட்டண ரெயில்கள் இரு மார்க்கமாக இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி மும்பை பாந்திரா ரெயில் நிலையத்தில் இருந்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.15 மணிக்கு சிறப்பு கட்டண ரயில் ( வண்டி எண். 09047) புறப்பட்டு மறுநாள் இரவு 8.35 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும்.

மறுமார்க்கமாக வேளாங்க ண்ணியில் இருந்து 29-ம் தேதி அதிகாலை 4.50 மணிக்கு புறப்படும் சிறப்பு கட்டண ரெயில் ( வண்டி எண்.09048) மறுநாள் மாலை 5.30 மணிக்கு மும்பை வதோதரா ரயில் நிலையத்துக்கு சென்றடையும்.

இதேபோல் செகந்திரா பாத்- வேளாங்கண்ணி சிறப்பு கட்டண ரெயில் (வண்டி எண்.07125) அடுத்த மாதம் ( செப்டம்பர்) 4-ம் தேதி காலை 8.40 மணிக்கு செகந்திராபாத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 8.40 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும்.

மறு வழிதடத்தில் வேளாங்கண்ணி- செகந்திராபாத் சிறப்பு கட்டண ரெயில் (வண்டி எண்.07126) அடுத்த மாதம் 6-ம் தேதி வேளாங்கண்ணியில் இருந்து அதிகாலை 12.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 12.30 மணிக்கு செகந்தராபாத் சென்றடையும்.

இதேபோல் செகந்தி ராபாத்- வேளாங்கண்ணி இடையே மற்றொரு சிறப்பு கட்டண ரெயில் ( வண்டி எண்.07127) செகந்திராபாத்தில் இருந்து அடுத்த மாதம் 8-ம் தேதி காலை 8 .40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.30 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும்.

மறு வழித்தடத்தில் வேளாங்கண்ணியில் இருந்து ( வண்டி எண்.07128) அடுத்த மாதம் 10-ம் தேதி அதிகாலை 1.20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 1.30 மணிக்கு செகந்திராபாத் சென்ற டையும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News