உள்ளூர் செய்திகள்

விழாவில் ஒரு மாணவிக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்ட காட்சி.

வாசுதேவநல்லூர் எஸ்.தங்கப்பழம் பாலிடெக்னிக் கல்லூரியில் வளாகத்தேர்வு

Published On 2023-03-16 08:37 GMT   |   Update On 2023-03-16 08:37 GMT
  • தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
  • விழாவுக்கு எஸ்.தங்கப்பழம் கல்வி குழுமத்தின் தாளாளர் முருகேசன் தலைமை தாங்கினார்.

சிவகிரி:

வாசுதேவநல்லூர் எஸ்.தங்கப்பழம் பாலிடெக்னிக் கல்லூரியில் 3-ம் ஆண்டு பயிலும் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் மாணவர்களுக்கு வளாகத்தேர்வு நடத்தப்பட்டது. சென்னையில் உள்ள சால்காம்ப் டெக்னாலஜிஸ் கம்பெனி கலந்து கொண்டு வளாகத்தேர்வை நடத்தியது. தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா நடைபெற்றது. விழாவுக்கு எஸ்.தங்கப்பழம் கல்வி குழுமத்தின் தாளாளர் முருகேசன் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் ராமநாதன் வரவேற்று பேசினார். சால்காம்ப் டெக்னாலஜிஸ் கம்பெனியின் மனிதவள அலுவலர் தட்சணாமூர்த்தி மற்றும் விவேக் ஆகியோர் மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை வேலைவாய்ப்பு அலுவலர் மற்றும் அனைத்துத்துறை தலைவர்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News