உள்ளூர் செய்திகள்

மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டபோது எடுத்தபடம்.

வாசுதேவநல்லூர் எஸ்.தங்கப்பழம் பாலிடெக்னிக் கல்லூரியில் வளாகத் தேர்வு

Published On 2023-03-03 08:55 GMT   |   Update On 2023-03-03 08:55 GMT
  • தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கும் விழா மாலையில் நடைபெற்றது.
  • மாணவர்களுக்கு ஜியோ இன்போ மீடியா நிறுவன நிர்வாக இயக்குனர் சொக்கலிங்கம் பணிநியமன ஆணையை வழங்கினார்.

சிவகிரி:

வாசுதேவநல்லூர் எஸ்.தங்கப்பழம் பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயிலும் சிவில் மாணவர்களுக்கு நேற்று கல்லூரியில் வளாகத் தேர்வு நடத்தப்பட்டது. சென்னையிலுள்ள ஜியோ இன்போ மீடியா கம்பெனி கலந்துகொண்டு தேர்வை நடத்தியது. வளாகத் தேர்வில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கும் விழா மாலையில் நடைபெற்றது.

விழாவிற்கு எஸ்.தங்கப்பழம் கல்வி குழும நிறுவனர் எஸ்.தங்கப்பழம், தாளாளர் எஸ்.டி.முருகேசன் ஆகியோர் தலைமை தாங்கினர். கல்லூரி குழுமத்தின் முதல்வர் ராமநாதன் வரவேற்று பேசினார். ஜியோ இன்போ மீடியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சொக்கலிங்கம் மாணவர்களுக்கு பணிநியமன ஆணையை வழங்கினார். வளாகத்தேர்வு ஏற்பாடுகளை வேலைவாய்ப்பு அலுவலர் மற்றும் அனைத்துதுறை தலைவர்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News