உள்ளூர் செய்திகள்

தந்தையின் சொத்தை அபகரித்து பெற்றோரை வெளியேற்றிய மகன்

Published On 2022-07-11 09:59 GMT   |   Update On 2022-07-11 09:59 GMT
  • நாங்கள் 50 ஆண்டுகளாக விவசாயம் செய்து பிழைப்பு நடத்தி வருகிறோம். எங்களுக்கு இரண்டு மகன்கள் மற்றும் 4 மகள்கள் உள்ளனர்.
  • தான செட்டில்மெண்ட் என்ற பெயரில் என்னுடைய பட்டா நிலத்தை அவரது பெயரில் எழுதிக் கொண்டார்.

சேலம்:

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள ராயர் பாளையம் பகுதியை சேர்ந்த கூத்தன் மற்றும் அவரது மனைவி செல்லம்மாள் ஆகியோர் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

நாங்கள் 50 ஆண்டுகளாக விவசாயம் செய்து பிழைப்பு நடத்தி வருகிறோம். எங்களுக்கு இரண்டு மகன்கள் மற்றும் 4 மகள்கள் உள்ளனர். எனது 2-வது மகன் வெங்கடேசன் எனக்கு உதவியாக விவசாயத்தை கவனித்து வந்தார்.

இதற்கிடையே விவசாய செலவிற்கு கடன் பெறுவதற்காக நிலத்தை அடமானம் வைக்க வேண்டும் என்று என்னிடம் கூறி வெங்கடேஷ் கெங்கவல்லி சார் பதிவாளர் அலுவலகத்திற்கு அழைத்து சென்றார். பின்னர் தான செட்டில்மெண்ட் என்ற பெயரில் என்னுடைய பட்டா நிலத்தை அவரது பெயரில் எழுதிக் கொண்டார்.

பின்னர் வெங்கடேசனும் அவரது மனைவியும் சேர்ந்து அனைத்து நிலங்களையும் அவர்கள் பெயரில் எழுதிக் கொண்டு எங்களை அடித்து வெளியேற்றி விட்டனர் .இதனால் நாங்கள் மூத்த மகன் ராமசாமி வீட்டில் வசித்து வருகிறோம். எனவே இந்த பத்திர பதிவை ரத்து செய்து எங்களுக்கு உதவ வேண்டும். இவ்வாறு அவர்கள் அதில் கூறி உள்ளனர்.

Tags:    

Similar News