உள்ளூர் செய்திகள்

யானை கவுனியில் அண்ணன் நகைக்கடையில் நகைகளை திருடிய தம்பி கைது

Published On 2023-06-19 14:19 IST   |   Update On 2023-06-19 14:19:00 IST
  • யோகேஷ் ஜெயினின் உடன் பிறந்த தம்பி வினோத் ஜெயின் என்பவரே நகைகளை திருடியது தெரிய வந்தது.
  • தனிப்படை அமைத்து தலைமறைவாக இருந்த வினோத்தை யானை கவுனி போலீசார் கைது செய்தனர்.

சென்னை:

சவுகார்பேட்டை பெரிய நாயக்கன் தெருவில் யோகேஷ் ஜெயின் என்பவரது நகைக்கடையில் இருந்து கடந்த 3-ந் தேதி ஒரு கிலோ தங்க கட்டி 15 லட்சம் ரூபாய் ரொக்கம் திருட்டு போனது. இது தொடர்பாக யானை கவுனி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதில் யோகேஷ் ஜெயினின் உடன் பிறந்த தம்பி வினோத் ஜெயின் என்பவரே நகைகளை திருடியது தெரிய வந்தது. அவர் தப்பி ஓடி தலைமறைவாக இருந்தார். இதைத் தொடர்ந்து தனிப்படை அமைத்து தலைமறைவாக இருந்த வினோத்தை யானை கவுனி போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ஒரு கிலோ தங்கம், 1½ லட்சம் ரொக்கம், கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை நடைபெறுகிறது.

Tags:    

Similar News