உள்ளூர் செய்திகள்

நாய் கடித்து சிறுவன் பலி

Published On 2025-09-22 11:35 IST   |   Update On 2025-09-22 11:35:00 IST
  • ரேபிஸ் நோய் தாக்குதலில் சிறுவன் உயிரிழந்தது தெரியவந்தது.
  • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராயக்கோட்டை:

உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் நந்தலால். இவரது மனைவி ரேகா. இவர்களுக்கு மூன்றரை வயது சிறுவன் சத்யா.

இவர்கள் மாசி நாயக்கன பள்ளி கிராமத்தில் ராம மூர்த்தி என்பவருக்கு சொந்தமான பசுமை குடிலில் அங்கேயே தங்கி இருந்து கூலி வேலை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த மாதம் 31-ந்தேதி சிறுவன் விளையாடி கொண்டிருந்த பொழுது தெருநாய் முகம், கை ஆகிய பகுதிகளில் அவனை கடித்து குதறியதால் காயங்கள் ஏற்பட்டது. சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு அவரை மீட்ட பெற்றோர், சிகிச்சைக்காக ஓசூர் அரசு மருத்துவமனை யில் சிறுவன் அனுமதிக்கப்பட்டார்.

சிகிச்சை முடிந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு வீடு திரும்பிய நிலையில் நேற்று மாலை கழிவறைக்கு செல்லும் போது சிறுவன் மயங்கி விழுந்தார்.

அவரை மீட்டு மருத்து வமனைக்கு அழைத்து சென்ற போது வழியிலேயே உயிரிழந்தார். 21 நாட்களுக்கு பிறகு ரேபிஸ் நோய் தாக்குதலில் சிறுவன் உயிரிழந்தது தெரியவந்தது.

கெலமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News