உள்ளூர் செய்திகள்

பகண்டை கூட்டுரோடு அருகே மதுபாட்டில் விற்றவர் கைது

Published On 2023-07-24 11:59 IST   |   Update On 2023-07-24 11:59:00 IST
  • சப்-இன்ஸ்பெக்டர் சூர்யா தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
  • கைது செய்து, அவரிடம் இருந்து 7 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

கள்ளக்குறிச்சி: 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தை அடுத்த மரூர் பகுதியில் பகண்டை கூட்டுரோடு சப்-இன்ஸ்பெக்டர் சூர்யா தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த ரத்தினவேல் (வயது 44) என்பவர் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார். போலீசார் அவரை கைது செய்து, அவரிடம் இருந்து 7 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News