உள்ளூர் செய்திகள்

கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் புத்தக கண்காட்சியை தொடங்கிவைத்து பார்வையிட்ட காட்சி.

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் புத்தக கண்காட்சி- 4 நாட்கள் நடக்கிறது

Published On 2023-01-25 09:02 GMT   |   Update On 2023-01-25 09:02 GMT
  • ஆதித்தனார் கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் புத்தக கண்காட்சியை தொடங்கி வைத்தார்
  • போட்டி தேர்வுகளுக்கு தேவையான அனைத்து புத்தகங்களும் கண்காட்சியில் கிடைக்கிறது.

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் புத்தக கண்காட்சி நேற்று தொடங்கியது. கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் கண்காட்சியை தொடங்கி வைத்தார். இந்த கண்காட்சியில் நெல்லையில் உள்ள சி.ஆர். புத்தக ஏஜென்சி தங்களது புத்தகங்களை காட்சிப்படுத்தி உள்ளனர். மேலும் அனைத்து துறைகளை சேர்ந்த புத்தகங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு மிகவும் அத்தியாவசியமான போட்டி தேர்வுகளுக்கு தேவையான அனைத்து புத்தகங்களும் கண்காட்சியில் கிடைக்கிறது.

இந்த கண்காட்சி தொடக்க விழாவில் மூத்த பேராசிரியர் முனைவர் பாலு, உடற்கல்வி இயக்குனர் ஜிம்ரீவ்ஸ், உதவி பேராசிரியர் மருதையா பாண்டியன் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி நூலகர் முத்துக்கிருஷ்ணன் மற்றும் நூலக உதவியாளர் சரவணமுத்து, முத்துக்கிருஷ்ணன் ஆகியோர் செய்திருந்தனர். கண்காட்சி நாைள மறுநாள் (வெள்ளிக்கிழமை) வரை நடக்கிறது.

Tags:    

Similar News