உள்ளூர் செய்திகள்

கருப்பு கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்.

நிலக்கோட்டையில் 5வது நாளாக கருப்பு கொடி போராட்டம்

Published On 2023-05-10 06:27 GMT   |   Update On 2023-05-10 06:27 GMT
  • அரசு கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை அரசு பள்ளிக்கல்வி துறையோடு இணைப்பதை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி பிரமலைக்கள்ளர் வீடுகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நிலக்கோட்டை:

நிலக்கோட்டை அருகே பிள்ளையார் நத்தம் ஊராட்சியில் உள்ள கொக்கு பிள்ளை பட்டி, ராமராஜபுரம், அணைப்பட்டி, எம். குரும்பபட்டி, என். ஊத்துப்பட்டி, எஸ். மேட்டுப்பட்டி, மட்டப்பாறை, சிலுக்குவார்பட்டி, சென்னஞ்செட்டிபட்டி, ஜி.தும்மலப்பட்டி, கெங்குவார்பட்டி, திண்டுக்கல், காமு பிள்ளை சத்திரம், குளத்துபட்டி ,என். கோயில்பட்டி, தெப்பத்துப்பட்டி, தருமத்துப்பட்டி, விராலி மாயன்பட்டி, விருவீடு , தாதபட்டி உள்ளிட்ட 30க்கு மேற்பட்ட கிராமங்களில் அரசு கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை அரசு பள்ளிக்கல்வி துறையோடு இணைப்பதை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி பிரமலைக்கள்ளர் வீடுகளில் தொடர்ந்து 5 நாளாக கருப்புக்கொடி ஏந்தி தங்களது போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News